நியூ KVM ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்தும்
கோல்டு+ திட்டம் ( One Term Payment )

❈ நீங்கள் செலுத்தும் தொகைக்கு அன்றைய மார்க்கெட்டின் மதிப்பிற்கேற்றவாறு, தூய 22காரட் தங்கம் கிராமில் வரவு வைக்கப்படும்.

❈ நீங்கள் அளிக்கும் தங்கத்தின் மதிப்பிற்கேற்றவாறு, தூய 22காரட் தங்கம் கிராமில் வரவு வைக்கப்படும்.

❈ திட்டத்தின் காலம் – 11 மாதங்கள்.

❈ திட்டகால முடிவில், வரவு வைக்கப்பட்ட தங்கத்தின் எடைக்கு நிகராக தூய 916 ஹால்மார்க் தரமுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். (18% வரை)

பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:

இத்திட்டத்தில் சேருவதற்கு ஆவணங்கள் ஏதேனும் சமர்ப்பிக்க வேண்டுமா?
இத்திட்டத்தில் செலுத்தும் பணத்தின் மதிப்பானது ரூ.2,00,000 /- அல்லது அதற்குமேல் இருக்கும்பட்சத்தில், அரசின் விதிபடி வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

எங்கள் நகைகளை எப்பொழுது பெற இயலும், திட்டகால முடிவுக்கு முன்னரோ பெற இயலுமா?
திட்டகாலமான 11 மாதங்கள் முடிந்த பிறகு, 12ஆம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். திட்டகால முடிவுக்கு முன்னரே நகைகளை வாங்க விரும்பினால், வாங்கும் நகைகளுக்கு சேதாரம் மற்றும் GST உண்டு. மேலும் தங்க காசுகளாக பெற இயலாது. தங்கம் மற்றும் வைர நகைகளாக மட்டுமே பெற முடியும்.


இத்திட்டத்தில் சேருவதற்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச மற்றும் அதிபட்ச தொகை எவ்வளவு? தவணை முறையில் செலுத்தலாமா?
குறைந்தபட்ச தொகையாக ரூ.10,000 முதல், அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். ஒரு முறை மட்டுமே செலுத்த முடியும்.
தவணை முறை இத்திட்டத்திற்கு பொருந்தாது.

இத்திட்டத்தில் எங்களின் தங்கம் எவ்வாறு வரவு வைக்கப்படும்?
வாடிக்கையாளர்கள் அளிக்கும் தங்க நகைகளை தூய்மை செய்து 22 காரட் தங்கமாக மாற்றி இத்திட்டத்தில் வரவு வைக்கப்படும். மேலும், 24 காரட் தங்க கட்டிகள், தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களையும் கொடுத்து அன்றைய மார்க்கெட் மதிப்பிற்கு 22 காரட் தங்கமாக கிராமில் வரவு வைக்கப்படும்.

    Terms & Conditions

    திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் :

    1. இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் 11 வது மாதம் முற்றிலும் முடிந்த பிறகு 12ஆம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

    2. இத்திட்டத்தில் தாங்கள் தாங்கள் செலுத்தும் பணம் / தங்கமானது அன்றைய மார்கெட் விலைக்கேற்ப (22 கேரட்) தங்க எடையாக தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    3. வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு 18% வரை சேதாரம் / VA, செய்கூலி இல்லை. அதற்குமேல் சேதாரம் & செய்கூலி உள்ள நகைகளை வாங்கும்பொழுது, கூடுதலாக உள்ள செய்கூலி & சேதார சதவீதத்தை மட்டும் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

    4. உதாரணமாக வாடிக்கையாளர்கள் வாங்கும் நகையின் சேதாரம் / VA, செய்கூலி 21%ஆக இருந்தால் வித்தியாச சேதாரம் / VA,செய்கூலி 3%க்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது + GST.

    5.திட்டம் முதிர்ந்து 12ஆம் மாதத்தில் நகை வாங்கும்பொழுது,வாடிக்கையாளரின் பாஸ்புத்தகத்தில் உள்ள தகுதி பெற்ற எடைக்கு மேல் கூடுதலாக நகை வாங்கும்பொழுது, கூடுதல் எடைக்கு உண்டான சேதாரம்/VA, செய்கூலி மற்றும் தங்கத்திற்கான அன்றைய மார்க்கெட் விலையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    6. வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 18% வரை சேதாரம்/VA மட்டும் இல்லை. செய்கூலி உண்டு. (நிபந்தனைகளுக்கு உட்பட்டது.)

    7. இத்திட்டத்தின் மூலம் வாங்கும் யுனிக், NL யுனிக், கிளாசிக், யுனிக் கிளாசிக், பிரைம், பூஜை பொருட்கள், Etc.., போன்ற சிறப்பு வாய்ந்த அனைத்து நகைகளுக்கும் செய்கூலி உண்டு.

    8. சிறப்புவாய்ந்த கற்கள், விலையுயர்ந்த கற்கள், பிறப்பு யோகக் கற்கள், சிர்கான் (Zircon), மற்றும் இதர பிற கல், எனாமல், மணிகள், மெழுகு, வெள்ளி இலை போன்றவைகளுக்கு கட்டணங்கள் பொருந்தும்.

    9. இத்திட்டத்தில் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் GST பொருந்தும்.

    10. வாடிக்கையாளர்கள் வழங்கும் நகையை, மதிப்பீட்டாளர் மதிப்பீட்டின் அடிப்படையில் ரொக்கமாக வரவு வைக்கப்படும்.

    11. ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாஸ்புக்கை கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்புக்கை தொலைத்துவிட்டால் புதிய பாஸ்புக்கை பெறுவதற்கு ரூ.50/-கட்டணமாக செலுத்தவேண்டும். வாடிக்கையாளரின் விபரங்களை சரிபார்த்த பிறகே பாஸ்புக் நகல் வழங்கப்படும்.

    12. இத்திட்டத்தில் வாடிக்கையாளரின் போட்டோ, கைரேகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்படும். திட்டத்தின் இறுதியில் தங்க நகை வாங்கும்பொழுது திட்டத்தின் உறுப்பினர் நேரில் வரவேண்டும். திட்ட உறுப்பினரின் பெயர் மற்றும் கூடுதல் விபரங்களை சரிபார்க்க, உறுப்பினர் தங்களின் ஓரிஜினல் ஆதார் அட்டை & பதிவு செய்த தொலைபேசியை அவசியம் கொண்டுவருதல் வேண்டும். மேலும் ஒரிஜினல் பாஸ்புத்தகத்தை கண்டிப்பாக சமர்ப்பிக்கவேண்டும்.

    13. வாடிக்கையாளர் தன்னுடைய வாரிசுதாரர் ஒருவரை தேவைப்பட்டால் நியமிக்கலாம்.

    14. சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகைக்கால சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.

    15. இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களை பெற இயலாது. திட்ட காலம் முதிர்வு அடைவதற்குள் நகை திட்டத்தை முடித்துக்கொண்டால், அதற்கான செயலாக்க கட்டணத்தை(Processing fees) வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.

    16. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை ரூ.2,00,000/- அல்லது அதற்க்கு மேற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    17. இத்திட்டத்தின் நிபந்தனைகளை மாற்றி அமைக்க நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. மேலும் அனைத்து சட்டரீதியான முறையீடுகளும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.