நியூ KVM ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்தும்
கோல்டு காயின் திட்டம் ( One Term Payment )

❋ நீங்கள் செலுத்தும் தொகைக்கு அன்றைய மார்க்கெட்டின் மதிப்பிற்கேற்றவாறு, தூய 916 ஹால்மார்க் தரமுள்ள தங்க நாணயங்களாக கிராமில் வரவு வைக்கப்படும்.

❋ திட்டத்தின் காலம் – 11 மாதங்கள்.

❋ திட்டகால முடிவில் வரவு வைக்கப்பட்ட தங்கத்தின் எடைக்கு நிகராக தூய 916 ஹால்மார்க் தரமுள்ள தங்க நாணயங்களை செய்கூலி, சேதாரம் மற்றும் இதர கட்டணங்கள் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

❋ குறைந்தபட்ச எடையாக 1 கிராம், 2 கிராம் வீதம் எவ்வளவு வேண்டுமானாலும் தேர்வு செய்து எடைக்கேற்ப அன்றைய மார்க்கெட் விலையை ஒருமுறை மட்டும் செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். தவணை முறை இத்திட்டத்திற்கு பொருந்தாது.

பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:

இத்திட்டத்தில் சேருவதற்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச எடை எவ்வளவு? தவணை முறையில் செலுத்தலாமா?
குறைந்தபட்ச எடையாக 1 கிராம், 2 கிராம் வீதம் எவ்வளவு வேண்டுமானாலும் தேர்வு செய்து எடைக்கேற்ப அன்றைய மார்க்கெட் விலையை ஒருமுறை மட்டும் செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
தவணை முறை இத்திட்டத்திற்கு பொருந்தாது.

இத்திட்டத்தில் எங்களின் தொகை எவ்வாறு வரவு வைக்கப்படும்?
நீங்கள் செலுத்தும்  தொகையானது, எடையாக தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் சேருவதற்கு ஆவணங்கள் ஏதேனும் சமர்ப்பிக்க வேண்டுமா?
இத்திட்டத்தில் செலுத்தும் பணத்தின் மதிப்பானது ரூ.2,00,000 /- அல்லது அதற்குமேல் இருக்கும்பட்சத்தில், அரசின் விதிபடி வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

எங்கள் நகைகளை எப்பொழுது பெற இயலும், திட்டகால முடிவுக்கு முன்னரோ பெற இயலுமா?
திட்டகாலமான 11 மாதங்கள் முடிந்த பிறகு, 12ஆம் மாதத்திற்குள் தங்க நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். திட்டகால முடிவுக்கு முன்னரே வாங்க விரும்பினால், திட்டத்தின் பலன்களை பெற இயலாது.

    Terms & Conditions

    திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் :
    1. இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் 11 மாதம் முற்றிலும் முடிந்த பிறகு 12 ஆம் மாதத்திற்குள் நாணயங்களை பெற்றுக்கொள்ளவேண்டும்.

    2. திட்டகால முடிவில், வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்களை கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லாமல் 100mg, 250mg, 500mg, 1 Gram, 2 Gram, 4 Gram, 8 Gram, 16 Gram, 24 gram, 32 Gram, 40 Gram நாணயங்களாக பெற்றுக்கொள்ளலாம்.

    3. தங்க நாணயங்களின் எடை கணக்கிற்கு ஏற்றாற்போல் ரொக்கமாக செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம்.

    4. இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் பணமானது அன்றைய மார்கெட் விலைக்கேற்ப (22 கேரட்) தங்க எடையாக தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    5. வாடிக்கையாளரின் பாஸ்புக்கில் உள்ள மொத்த எடைக்கு அதிகமாக தங்கம் நாணயங்கள் வாங்கும் போது கூடுதல் எடைக்கு இதர கட்டணங்களை செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

    6. தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு இத்திட்டத்தின் சலுகைகள் பொருந்தாது.

    7. சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகைக்கால சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.

    8. இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களை பெற இயலாது. அவ்வாறு விலகும் பட்சத்தில் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட எடைக்கு நிகராக தங்க நாணயங்களை செய்கூலி & சேதாரம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    9. ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாஸ்புக்கை கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்புக்கை தொலைத்துவிட்டால் புதிய பாஸ்புக்கை பெறுவதற்கு ரூ.50/-கட்டணமாக செலுத்தவேண்டும். வாடிக்கையாளரின் விபரங்களை சரிபார்த்த பிறகே பாஸ்புக் நகல் வழங்கப்படும்.

    10. இத்திட்டத்தில் வாடிக்கையாளரின் போட்டோ, கைரேகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்படும். திட்டத்தின் இறுதியில் தங்க நகை வாங்கும்பொழுது திட்டத்தின் உறுப்பினர் நேரில் வரவேண்டும். திட்ட உறுப்பினரின் பெயர் மற்றும் கூடுதல் விபரங்களை சரிபார்க்க, உறுப்பினர் தங்களின் ஓரிஜினல் ஆதார் அட்டை & பதிவு செய்த தொலைபேசியை அவசியம் கொண்டுவருதல் வேண்டும். மேலும் ஒரிஜினல் பாஸ்புத்தகத்தை கண்டிப்பாக சமர்ப்பிக்கவேண்டும்.

    11. வாடிக்கையாளர் தன்னுடைய வாரிசுதாரர் ஒருவரை தேவைப்பட்டால் நியமிக்கலாம்.

    12. இத்திட்டத்தில் ரொக்க தொகை எக்காரணத்தை கொண்டும் திருப்பி தர இயலாது, திட்டம் முதிர்வடையும் போது புதிய தங்க நாணயங்களாக மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். திட்ட காலம் முதிர்வு அடைவதற்குள் இத்திட்டத்தை முடித்துக்கொண்டால், அதற்கான செயலாக்க கட்டணத்தை (Processing fees) வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.

    13. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை ரூ.2,00,000/- அல்லது அதற்க்கு மேற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    14. இத்திட்டத்தின் நிபந்தனைகளை மாற்றி அமைக்க நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. மேலும் அனைத்து சட்டரீதியான முறையீடுகளும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.