Aishwaryam

ஐஸ்வர்யம்

உதாரணம்

மாதம் செலுத்தும் ரூபாய்
மொத்தம் 11 மாதங்கள் செலுத்தும் ரூபாய்
நிறுவனம் பங்களிக்கும் தொகை
திட்ட முடிவில் பெறும் நகையின் மதிப்பு ரூபாய்
1000 11000 1000 12000
2000 22000 2000 24000
3000 33000 3000 36000
5000 55000 5000 60000
10000 110000 10000 120000
15000 165000 15000 180000

பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:

இத்திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?
இத்திட்டத்தில் 11 மாதங்கள் தவணையை தவறாமல் செலுத்தி வந்தால், 12ஆம் மாதம் முடிவில் ஒரு மாத தவணையை போனஸ்ஸாக பெற்று பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் குறைந்தபட்ச & அதிகபட்ச மாதத் தவணை எவ்வளவு?
குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.15000 வரை செலுத்தலாம்

மாதத்தவணை எப்போது, எவ்வாறு செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு மாத 10ஆம் தேதிக்குள் மாதத் தவணையை தவறாமல் செலுத்திவிட வேண்டும். ரொக்கமாகவோ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் மாத தவணையை நீங்கள் செலுத்தலாம்.

நான் செலுத்தும் மாத தவணையை எவ்வாறு எனது கணக்கில் வரவு வைக்கப்படும்?
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையை பணமாகவே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் சிறப்பு சலுகைகள் அல்லது பண்டிகை கால சலுகைகளுடன் பெற இயலுமா?
திட்ட பலன்களை, சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகை கால சலுகைகளுடன் இணைத்து பெற இயலாது. திட்டத்திற்கான பலன்களை மட்டுமே பெற இயலும்.

இத்திட்டத்தில் எனது சேமிப்பை பணமாக பெற இயலுமா?
தங்கம்/வைரம்/பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளாக மட்டுமே பெற இயலும். எச்சூழ்நிலையிலும் தங்க காசுகளாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற இயலாது.

தவணையை செலுத்த தவறினால் என்ன ஆகும்?
தவணையை செலுத்த தவறும்பட்சத்தில், திட்டத்தின் பலன்களை பெற இயலாது. மொத்தம் செலுத்திய தவணை மதிப்பிற்கேற்ப நகைகளை சேதாரம் மற்றும் GST செலுத்தியே வாங்க இயலும்.

    Terms & Conditions

    திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் :

    1. இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் 11 வது மாதம் முற்றிலும் முடிந்த பிறகு 12ஆம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

    2. இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் பணமானது ரொக்கமாகவே தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    3. இத்திட்டத்தில் 11 மாதங்கள் தவணையை செலுத்தி வந்தால், 12ஆம் மாதம் முடிவில் ஒரு மாத தவணையை போனஸ்ஸாக பெற்று
    பயன்பெறலாம்.

    4. இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.250 முதல் ரூ.15000 வரை செலுத்தலாம்.

    5. மாதத்தின் 10ஆம் தேதிக்குள் தவணையை தவறாமல், ரொக்கமாகவோ, கிரெடிட் & டெபிட் கார்டுகள் மூலமாகவோ, எங்களின் கலெக்ஷன் வாகனங்களிலோ அல்லது www.kvmjewellers.com என்ற எங்களின் இணையதளத்தின் மூலமாகவோ செலுத்திட வேண்டும்.

    6. தவணை முறை திட்டங்களில், ஒரு மாதத்திற்கு ஒரு தவணையை மட்டுமே செலுத்த முடியும். திட்டத்தின் முதல் மாதம் தொடங்கி இறுதி
    மாதம் வரை ஒரே தவணை தொகையில் தான் தொடர வேண்டும். இடையில் தவணை முறையையோ, தொகையையோ மாற்றி அமைக்க
    இயலாது.

    7. ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாஸ்புக்கை கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்புக்கை தொலைத்துவிட்டால் புதிய பாஸ்புக்கை பெறுவதற்கு ரூ.50/- கட்டணமாக செலுத்தவேண்டும். வாடிக்கையாளரின் விபரங்களை சரிபார்த்த பிறகே பாஸ்புக் நகல் வழங்கப்படும்.

    8. இத்திட்டத்தில் சேரும் போது சேருபவரின் போட்டோ மற்றும் பயோமெட்ரிக் முறையில் அவரது விரல்ரேகை பதிவு செய்யப்படும். நகைகள் வாங்கும்போது அவரது முக அடையாளம் / கைரேகை சரிபார்க்கப்படும்.

    9. வாடிக்கையாளர் தன்னுடைய வாரிசுதாரர் ஒருவரை தேவைப்பட்டால் நியமிக்கலாம்.

    10. சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகைக்கால சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.

    11. இத்திட்டத்தில் தாங்கள் செலுத்திய ரொக்க தொகையை எக்காரணத்தை கொண்டும் பணமாக திருப்பி தர இயலாது, திட்டம் முதிர்வடையும் போது புதிய நகைகள் மற்றும் பவுன் காசுகளாக மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.

    12. இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களை பெற இயலாது. திட்ட காலம் முதிர்வு அடைவதற்குள் நகை திட்டத்தை முடித்துக்கொண்டால், அதற்கான செயலாக்க கட்டணத்தை(Processing fees) வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.

    13. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை ரூ.2,00,000/- அல்லது அதற்க்கு மேற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC
    ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    14. இத்திட்டத்தின் நிபந்தனைகளை மாற்றி அமைக்க நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. மேலும் அனைத்து சட்டரீதியான முறையீடுகளும்
    கள்ளக்குறிச்சி நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.